செய்திகள்
திருமருகல் அருகே கொரோனா பரிசோதனை முகாம்
திருமருகல் ஒன்றியம் சீயாத்தமங்கை ஊராட்சியில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது.
திட்டச்சேரி:
திருமருகல் ஒன்றியம் சீயாத்தமங்கை ஊராட்சியில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி ஒன்றிய ஆணையர் ஞானசெல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) அன்பரசு ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் வட்டார மருத்துவ அலுவலர் அறிவொளி, மருத்துவர்கள் மணிவேல், பிரித்திவிராஜ் ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் கொரோனா பரிசோதனை செய்தனர். இதனை திருமருகல் ஒன்றியக்குழு தலைவர் ராதாகிருட்டிணன் பார்வையிட்டனர். இதில் ஒன்றியக்குழு உறுப்பினர் பெரியமணி, ஊராட்சி மன்ற தலைவர் சிவகாமிஅன்பழகன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.