செய்திகள்
கைது

வாய்மேடு அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது

Published On 2020-10-07 08:59 GMT   |   Update On 2020-10-07 08:59 GMT
வாய்மேடு அருகே லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாய்மேடு:

வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தானமேரி மற்றும் போலீசார் ஆயக்காரன்புலம் கடைத்தெரு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் வேதாரண்யம் தெற்கு வீதியை சேர்ந்த சாமிநாதன் (வயது52) என்பதும், லாட்டரி சீட்டு விற்றதும் தெரியவந்தது. இதுகுறித்து வாய்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சாமிநாதனை கைது செய்தனர்.
Tags:    

Similar News