செய்திகள்
விபத்து பலி

இளையான்குடி அருகே விபத்தில் முதியவர் பலி

Published On 2020-10-06 16:16 IST   |   Update On 2020-10-06 16:16:00 IST
இளையான்குடி அருகே விபத்தில் முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளையான்குடி:

இளையான்குடி அருகே உள்ள வழக்காணிகிராமத்தைச் சேர்ந்தவர் பால்கரசு (வயது68). இவர் தலையாரி வேலை பார்த்து பணி ஓய்வு பெற்றவர். இவர் மோட்டார் சைக்கிளில் சாலைக்கிராமம் நோக்கி சென்றுள்ளார். அப்போது கோட்டையூர் பாத்திமா சேம்பர் அருகே நிலை தடுமாறி வாகனம் விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் இளையான்குடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News