செய்திகள்
கைது

அறந்தாங்கியில் 1 கிலோ கஞ்சா வைத்திருந்தவர் கைது

Published On 2020-10-06 10:31 GMT   |   Update On 2020-10-06 10:31 GMT
அறந்தாங்கியில் 1 கிலோ கஞ்சா வைத்திருந்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறந்தாங்கி:

அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோவில் குளத்துகரை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக அறந்தாங்கி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திரனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அறந்தாங்கி கோட்டை 4-ம் வீதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தார். போலீசார் அவரை கைது செய்து, விற்பனைக்காக வைத்து இருந்த 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.                      
Tags:    

Similar News