செய்திகள்
குத்தாலம் அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது
குத்தாலம் அருகே சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குத்தாலம்:
குத்தாலம் அருகே ஆட்டூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 39). இவர், ஆட்டூர் நண்டலார் பாலம் அருகே சாராயம் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் பாலையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு குணசேகர் சாராயம் விற்பது தெரிய வந்தது. உடனே போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதேபோல ஆட்டூர் சுடுகாடு அருகே சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த மயிலாடுதுறை அடுத்த மாப்படுகை வேதம்பிள்ளை தெருவை சேர்ந்த பாலு மகன் அருண் (22) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.