செய்திகள்
விபத்து பலி

கீழ்வேளூரில் மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி

Published On 2020-10-05 12:28 IST   |   Update On 2020-10-05 12:28:00 IST
கீழ்வேளூரில் மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிக்கல்:

கீழ்வேளூர் அருகே அகரகடம்பனூர் ஊராட்சி நாங்குடியை சேர்ந்தவர் பட்டு (வயது75). நேற்று முன்தினம் இவர் கீழ்வேளூரில் உள்ள ஒரு வங்கியில் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்த பணத்தை எடுக்க வந்தார். பணத்தை எடுத்துவிட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த மோட்டார்சைக்கிள் மூதாட்டி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பட்டுவின் பேரன் திவாகர் கொடுத்த புகாரின் பேரில் கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டி மீது மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாலிபரை தேடி வருகின்றனர்.

Similar News