செய்திகள்
தற்கொலை

திருமயம் அருகே மூதாட்டி தற்கொலை

Published On 2020-10-04 07:58 GMT   |   Update On 2020-10-04 07:58 GMT
திருமயம் அருகே மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமயம்:

திருமயம் அருகே உள்ள கரையான்பட்டியை சேர்ந்தவர் செல்லக்கண்ணு. இவரது மனைவி ஆராயி (வயது 79). சம்பவத்தன்று ஆராயி வீட்டில் யாரும் இல்லாதபோது, விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதைபார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருமயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருமயம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும் அவர் குடும்ப தகராறு காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
Tags:    

Similar News