செய்திகள்
உயிரிழப்பு

காஞ்சிபுரம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி பெண் உயிரிழப்பு

Published On 2020-10-01 10:39 GMT   |   Update On 2020-10-01 10:39 GMT
காஞ்சிபுரம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் மைனர் சாமி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
காஞ்சிபுரம்:

காஞ்சிபுரத்தை அடுத்த அப்துல்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் அமுல் (வயது 35). புஞ்சையரசந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் ஜோதி (35), இவர்கள் இருவரும் காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை செய்து வந்தனர்.

இந்த நிலையில் இவர்கள் நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து மொபட் டில் சென்றனர். அமுல் மொபட்டை ஓட்டிச்சென்றார். புஞ்சையரசந்தாங்கல் அருகே இவர்கள் சென்றபோது முன்னால் சென்ற ஒரு லாரியில் இவர்களது மொபட் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் லாரி சக்கரத்தில் சிக்கி அமுல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த ஜோதி காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் மைனர் சாமி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Tags:    

Similar News