செய்திகள்
காஞ்சிபுரம் அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதல்- வாலிபர் உயிரிழப்பு
காஞ்சிபுரம் அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.
காஞ்சிபுரம்:
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு கோவிந்த ரெட்டி பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோதண்டம். இவரது மகன் கார்த்திக் (வயது 20) இவரது நண்பர் திருப்பத்தூர் உசிலம்பட்டி கிராமத்தை சேர்ந்த தமிழரசன் (20), இவர்கள் இருவரும் காஞ்சிபுரம் அருகே கீழம்பி பகுதியில் ஒரு பேக்கரியில் வேலை செய்து வந்தனர்.
இந்த நிலையில் கார்த்திக் தனது நண்பரான தமிழரசனை அழைத்து கொண்டு மோட்டார்சைக்கிளில் காஞ்சிபுரம் அருகே கூரம் கேட்டில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். வெள்ளை கேட் அருகே வரும்போது எதிரே வந்த ஒரு கார் கண்ணிமைக்கும் நேரத்தில் இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் கார்த்திக் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயம் அடைந்த தமிழரசன் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் மைனர்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு கோவிந்த ரெட்டி பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோதண்டம். இவரது மகன் கார்த்திக் (வயது 20) இவரது நண்பர் திருப்பத்தூர் உசிலம்பட்டி கிராமத்தை சேர்ந்த தமிழரசன் (20), இவர்கள் இருவரும் காஞ்சிபுரம் அருகே கீழம்பி பகுதியில் ஒரு பேக்கரியில் வேலை செய்து வந்தனர்.
இந்த நிலையில் கார்த்திக் தனது நண்பரான தமிழரசனை அழைத்து கொண்டு மோட்டார்சைக்கிளில் காஞ்சிபுரம் அருகே கூரம் கேட்டில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். வெள்ளை கேட் அருகே வரும்போது எதிரே வந்த ஒரு கார் கண்ணிமைக்கும் நேரத்தில் இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் கார்த்திக் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயம் அடைந்த தமிழரசன் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் மைனர்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.