செய்திகள்
முககவசம் அணியாத 22 பேருக்கு அபராதம்
கொடுமுடி பகுதியில் முககவசம் அணியாத 22 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கொடுமுடி:
கொடுமுடி பைபாஸ் ரோட்டில் கொடுமுடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக முககவசம் அணியாமல் வந்த 12 பேருக்கு தலா ரூ.200 என மொத்தம் ரூ.2 ஆயிரத்து 400 அபராதமாக விதிக்கப்பட்டது.
இதேபோல் கொடுமுடியை அடுத்த க.ஒத்தக்கடை பகுதியில் உள்ள கரூர்- ஈரோடு பைபாஸ் ரோட்டில் கொடுமுடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன், வெங்கம்பூர் பேரூராட்சி செயல் அதிகாரி மகேந்திரன் மற்றும் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக முககவசம் அணியாமல் வந்ததாக 10 பேரிடம் தலா ரூ.200 வீதம் ரூ.2 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.