செய்திகள்
தற்கொலை

ஈரோடு அருகே திருமணமான 3 மாதத்தில் கணவன்-மனைவி தற்கொலை

Published On 2020-09-29 06:33 GMT   |   Update On 2020-09-29 06:33 GMT
ஈரோடு அருகே காதலித்து திருமணம் செய்து கொண்ட புதுமணத் தம்பதிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு:

ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே மல்லியூரை சேர்ந்தவர் இளங்கோ (வயது23). மெக்கானிக்கல் என்ஜினீயர். இவரது மனைவி ரம்யா (23). இருவரும் கல்லூரியில் ஒன்றாக படிக்கும் போது காதலித்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் இன்று காலை நீண்ட நேரமாக இளங்கோ வீட்டின் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் அவர் வீட்டுக்கு சென்று ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தனர். அப்போது இளங்கோவும்-ரம்யாவும் தூக்குப்போட்டு தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.

இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருமணமாகி 3 மாதமே ஆவதால் கோபி ஆர்.டி.ஓ. இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

காதலித்து திருமணம் செய்து கொண்ட புதுமணத் தம்பதிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News