செய்திகள்
கொரோனா பரிசோதனை

கொரோனா பரிசோதனை முகாம்

Published On 2020-09-27 13:12 GMT   |   Update On 2020-09-27 13:12 GMT
கறம்பக்குடி பஸ்நிலையத்தில் பேரூராட்சி மற்றும் சுகாதாரத்துறை சார்பில், வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் முகாம் நடைபெற்றது.
கறம்பக்குடி:

கறம்பக்குடி பஸ்நிலையத்தில் பேரூராட்சி மற்றும் சுகாதாரத்துறை சார்பில், வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் முகாம் நடைபெற்றது. அப்போது பேரூராட்சி நிர்வாக அதிகாரி சுப்பிரமணியன், வட்டார மருத்துவ அதிகாரி பஜ்ருல் அகமது, சுகாதார மேற்பார்வையாளர் துரைமாணிக்கம் ஆகியோர் பஸ் நிலையத்தில் பயணிகளிடம் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தொடர்ந்து அப்பகுதியில் முககவசம் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகள், பஸ் பயணிகள் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்டோருக்கு ரத்தம், சளி மாதிரி சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆய்வகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.
Tags:    

Similar News