செய்திகள்
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
புதுக்கோட்டை அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்,
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை பழைய ஆதனக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 20) . இவர் 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கியதாக சிறுமியின் தாய் புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அய்யப்பனை கைது செய்தனர்.