செய்திகள்
கைது

ஈரோடு அருகே மது விற்றவர் கைது

Published On 2020-09-27 08:24 GMT   |   Update On 2020-09-27 08:24 GMT
ஈரோடு அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:

ஈரோடு தாலுகா போலீசார் பச்சப்பாளி பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டு இருந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், புதுக்கோட்டை மாவட்டம் கறம்பகுடி அருகே உள்ள வாண்டான் விடுதி பகுதியை சேர்ந்த ராஜா (வயது 21) என்பதும், அவர் அந்த பகுதியில் நின்று கொண்டு மது விற்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 12 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Tags:    

Similar News