செய்திகள்
சரக்கு ஆட்டோ தீ

மாமல்லபுரம் அருகே சரக்கு ஆட்டோ தீப்பிடித்தது- 4 வாலிபர்கள் உயிர் தப்பினர்

Published On 2020-09-27 07:34 GMT   |   Update On 2020-09-27 07:37 GMT
மாமல்லபுரம் அருகே சரக்கு ஆட்டோவில் தீ பற்றியதும், டிரைவர் உள்பட 4 பேரும் இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

மாமல்லபுரம்:

மயிலாப்பூரை சேர்ந்தவர் முகிலன். இவர் வீட்டை காலி செய்துவிட்டு சொந்த ஊரான மரக்காணத்தில் குடியேறுவதற்காக வீட்டுப் பொருட்களை எடுத்து செல்லும் வேலையை நங்கநல்லூரில் உள்ள டிரான்ஸ்போட் நிறுவனத்திடம் ஒப்படைத்தார்.

நேற்று இரவு சரக்கு வேனில் அவரது வீட்டில் இருந்த பிரிட்ஜ், வாசிங்மிஷின், ஏர்கூலர், மிக்சி, கிரைன்டர், கட்டில், ஷோபா, பித்தளை பூஜை பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை சரத் என்ற டிரைவர் உட்பட 4 வாலிபர்கள் வாகனத்தில் ஏற்றினர்.

பின்னர் கிழக்கு கடற்கரை சாலை வழியாக மரக்காணம் நோக்கி அவர்கள் சென்று கொண்டிருந்தனர். அதிகாலை 3 மணியளவில் மாமல்லபுரம் புறவழிச்சாலை அருகே வந்த போது சரக்கு ஆட்டோவில் தீடிரென தீப்பிடித்தது.

உடனடியாக பூஞ்சேரி டோல்கேட் அருகே வண்டியை நிறுத்தி விட்டு தீயைஅனைக்க முயன்றனர். எனினும் தீ கொழுந்துவிட்டு எரிந்தது.

உடனடியாக டிரைவர் உள்பட 4 வாலிபர்களும் அங்கிருந்து தள்ளி நின்றனர். தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அனைத்தனர்.

எனினும் சரக்கு ஆட்டோவில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது. சரக்கு ஆட்டோவில் தீ பற்றியதும், டிரைவர் உள்பட 4 பேரும் இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Tags:    

Similar News