செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 39 பேருக்கு கொரோனா

Published On 2020-09-26 23:13 GMT   |   Update On 2020-09-26 23:13 GMT
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று மேலும் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் வரை 2 லட்சத்து 26 ஆயிரத்து 814 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் 15 ஆயிரத்து 147 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 3 ஆயிரத்து 545 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை.

13 ஆயிரத்து 679 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரு முகாமில் 13 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். வீடுகளில் 165 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. விருதுநகர் ரோசல்பட்டியை சேர்ந்த 39 வயது நபர், 27 வயது பெண், 48 வயது பெண், 33 வயது நபர், துலுக்கப்பட்டியை சேர்ந்த 45 வயது நபர், 40 வயது நபர், 53 வயது நபர், சதானந்தபுரத்தை சேர்ந்த 33 வயது பெண், ஆர்.எஸ். நகரை சேர்ந்த 33 மற்றும் 26 வயது நபர்கள், டி.பி. வையாபுரி தெருவை சேர்ந்த 23 வயது நபர், 83 வயது மூதாட்டி ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தண்டியனேந்தல், எஸ்.செல்லுப்பட்டி, இலுப்பை குளம், ரெட்டியப்பட்டி, கோனப்பனேந்தல், சாத்தூர், படந்தால், தைலாபுரம், மகாராஜபுரம், கோபாலபுரம், சொக்கலிங்கபுரம், தேவதானத்தை சேர்ந்த 2 பேர், சோலைச்சேரி உள்பட மாவட்டம் முழுவதும் 39 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,187 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 1,999 பேருக்கு பரிசோதனை செய்ததில் 3 ஆயிரத்து 545 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை.

தினசரி கிராமப்புறங்களிலேயே கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஆனாலும் மாவட்ட நிர்வாகம் கிராமப்புறங்களில் தடுப்பு நடவடிக்கை தீவிரம் காட்டாத நிலையே தொடர்கிறது. இதனால் கிராமப்புறங்களில் நோய் பரவல் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
Tags:    

Similar News