செய்திகள்
கடல் போல் காட்சி அளித்த காவிரி ஆறு

பாசனத்துக்கு திறப்பு- ஈரோடு காவிரியில் கரைபுரண்டு ஓடும் தண்ணீர்

Published On 2020-09-25 03:23 GMT   |   Update On 2020-09-25 03:23 GMT
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி தண்ணீர் ஈரோடு கருங்கல்பாளையத்தில் கரை புரண்டு ஓடியது கடல் போல் காட்சி அளித்தது.
ஈரோடு:

கர்நாடகாவில் பலத்த மழை பெய்ததால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மேட்டூர்அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.

இந்தநிலையில் டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றுக்கு 18 ஆயிரத்து 700 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு இருந்தது. இதனால் காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடி வருகிறது. ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆறு கரை புரண்டு ஓடும் தண்ணீரால் கடல் போல் காட்சி அளித்தது.

Tags:    

Similar News