செய்திகள்
மின்நிறுத்தம்

ஆலப்பாக்கம் பகுதியில் நாளை மின்நிறுத்தம்

Published On 2020-09-24 15:02 IST   |   Update On 2020-09-24 15:02:00 IST
ஆலப்பாக்கம் பகுதியில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
கடலூர்:

கடலூர் செம்மங்குப்பம் துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் செம்மங்குப்பம், பூண்டியாங்குப்பம், திருச்சோபுரம், சிப்காட் தொழிற்பேட்டை முழுவதும், சங்கொலி குப்பம், ஆலப்பாக்கம், சிறுபாலையூர், தானூர், சம்பாரெட்டிப்பாளையம், காரைக்காடு, கண்ணாரப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும்.

மேற்கண்ட தகவலை கடலூர் மின்வாரிய செயற்பொறியாளர் வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Similar News