செய்திகள்
தற்கொலை

ஈரோட்டில் ஆன்லைன் வர்த்தகத்தில் நஷ்டம்- தொழில் அதிபர் தற்கொலை

Published On 2020-09-24 12:59 IST   |   Update On 2020-09-24 12:59:00 IST
ஈரோட்டில் ஆன்லைன் வர்த்தகத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் தொழில் அதிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு:

ஈரோடு பழைய பாளையம் இந்திரா காந்தி வீதியை சேர்ந்தவர் நரசிம்மன்(வயது 41). இவரது மனைவி பாக்கியலட்சுமி (வயது39). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. நரசிம்மன் ஈரோடு சம்பத் நகரில் சேர்கான் என்ற ஆன்லைன் வர்த்தக அலுவலகம் நடத்தி வந்தார்.

இந்நிலையில், கொரோனா ஊரடங்கால் கடந்த சில மாதங்களாக பல லட்ச ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால், மனவேதனையுடன் காணப்பட்ட நரசிம்மன், வீட்டில் தூக்குப்போட்டு தொங்கினார். இதைப் பார்த்த அவரது மனைவி, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் நரசிம்மனை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார்.

அங்கு, டாக்டர்கள் பரிசோதித்து விட்டு நரசிம்மன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News