செய்திகள்
வழக்கு பதிவு

சாக்கு மூட்டையில் மணல் கடத்த முயன்ற 3 பேர் மீது வழக்கு

Published On 2020-09-23 15:06 GMT   |   Update On 2020-09-23 15:06 GMT
கீரமங்கலம் அருகே சாக்கு மூட்டையில் மணல் கடத்த முயன்ற 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கீரமங்கலம்:

கீரமங்கலம் அருகே உள்ள பனங்குளம் கிராமத்தில் வில்லுனி ஆற்றில் சாக்கு மூட்டைகளில் கட்டி மணல் கடத்தப்படுவதாக வருவாய்துறையினருக்கு புகார் வந்தது. அதன்பேரில் குளமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் தனலெட்சுமி தலைமையில் வருவாய்துறை அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு கடத்துவதற்காக 64 சாக்கு மூட்டைகளில் மணல் கட்டி வைக்கப்பட்டு இருந்தது. இதனை அவர்கள் பறிமுதல் செய்தனர். இது குறித்த புகாரின் பேரில் மணல் கடத்தலில் ஈடுபட்டதாக பனங்குளம் வடக்கு கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் (வயது 30), மகேந்திரன் (34), பனங்குளம் கிழக்கு பகுதியை சேர்ந்த முருகேசன் ஆகியோர் மீது கீரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
Tags:    

Similar News