செய்திகள்
சிங்காரப்பேட்டை அருகே சிறுமி கடத்தல் - வாலிபர் மீது புகார்
சிங்காரப்பேட்டை அருகே சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் குறித்து வாலிபர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்,
ஊத்தங்கரை:
சிங்காரப்பேட்டை அருகே உள்ள எலவம்பாடியைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் கடந்த 19-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது பெற்றோர் சிங்காரப்பேட்டை போலீசில் புகார் செய்தனர்.
இதில் திருப்பத்தூர் மாவட்டம் ஜம்மானபுதூர் பக்கமுள்ள ஏ.கே.மோட்டூரைச் சேர்ந்த பிரேம்குமார் (வயது32) என்பவர் தனது மகளை கடத்தி சென்றிருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.