செய்திகள்
கைது

வேலூர் ஓல்டு டவுனில் 1½ கிலோ கஞ்சா பறிமுதல்- 2 பேர் கைது

Published On 2020-09-23 12:56 IST   |   Update On 2020-09-23 12:56:00 IST
வேலூர் ஓல்டு டவுனில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேலூர்:

வேலூர் ஓல்டு டவுனில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தெற்கு போலீஸ் நிலையத்துக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் லதா தலைமையிலான போலீசார் அங்கு ரோந்து சென்றனர். அப்போது ஓல்டு டவுன் மேல்நிலை குடிநீர் தொட்டியின் அருகே மற்றும் மலைப்பாதை அருகே நின்று கொண்டிருந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரித்தனர்.

அதில், அவர்கள் அதே பகுதியை சேர்ந்த அரவிந்தன் (வயது 20), ஏழுமலை (51) என்பதும், கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 1½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Similar News