செய்திகள்
நெருப்புகுட்டை பகுதியில் பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:
கெலமங்கலம் போலீசார் நெருப்புகுட்டை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று சூதாடிய அதேபகுதியை சேர்ந்த சின்னதம்பி (வயது 38), கோவிந்தராஜ் (22), ராஜ்குமார் (25) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.