செய்திகள்
அந்தியூர் அருகே பணம் வைத்து சூதாடிய 11 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்தியூர்:
அந்தியூர் அருகே உள்ள அம்மன்பாளையம் பகுதியில் அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் போலீசார் ரோந்து வந்தனர். அப்போது அங்கு ஊருக்கு ஒதுக்குப்புறமான காட்டுப்பகுதியில் சிலர் சீட்டு விளையாடிக்கொண்டிருந்ததை கண்டனர். உடனே அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் பிடிபட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ‘அவர்கள் பவானியை சேர்ந்த குமார் (வயது 25), விஜயகுமார் (31), மணிகண்டன் (35), பெருந்துறையை சேர்ந்த சிவக்குமார் (32) உள்பட 11 பேர் பணம் வைத்து சூதாடியது,’ தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 11 பேரையும் போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து ரூ.77 ஆயிரத்து 300-யும் பறிமுதல் செய்தனர்.