செய்திகள்
விபத்து பலி

மோட்டார் சைக்கிள்கள் மோதல்- பெயிண்டர் பலி

Published On 2020-09-21 11:07 GMT   |   Update On 2020-09-21 11:07 GMT
காஞ்சிபுரம் அருகே விபத்தில் பெயிண்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:

காஞ்சிபுரத்தை அடுத்த தாமல் முசரவாக்கம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 40). பெயிண்டர். இவர் தனது மனைவி மாரியை அழைத்து கொண்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். பாலுச்செட்டிசத்திரம் பகுதியில் வந்த போது அவருக்கு பின்னால் வந்த மோட்டார்சைக்கிள் கண்ணிமைக்கும் நேரத்தில் வெங்கடேசனின் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு கீழம்பி சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து பாலுச்செட்டிசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News