செய்திகள்
கம்யூனிஸ்டு, எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 264 பேர் மீது வழக்கு
அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்டு, எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 264 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், சூளகிரி மற்றும் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை அருகே, கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில், மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கையை கண்டித்து நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு போலீசார் உரிய அனுமதி வழங்கவில்லை. இதனால் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 134 பேர் மீது அந்தந்த பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி, கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகே, நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 130 பேர் மீது கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.