செய்திகள்
தற்கொலை

காஞ்சிபுரம் அருகே தொழிலாளி தற்கொலை

Published On 2020-09-20 11:21 GMT   |   Update On 2020-09-20 11:21 GMT
காஞ்சிபுரம் அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:

காஞ்சிபுரத்தை அடுத்த பாலுச்செட்டிசத்திரம் அருகே உள்ள நரப்பாக்கம் மேல்கதிர்பூரை சேர்ந்தவர் தேவேந்திரன் (வயது 48). வெல்டிங் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 3 மகன்கள் உள்ளனர். மார்பு வலி ஏற்படவே மனமுடைந்த தேவேந்திரன் மேல்கதிர்பூரில் ஒரு டாஸ்மாக் கடை அருகே விஷம் குடித்துள்ளார். பின்னர் அவர் தன்னுடைய மகனுக்கு செல்போனில் விஷம் குடித்த தகவலை தெரிவித்துள்ளார்.

உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பாலுச்செட்டிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Tags:    

Similar News