செய்திகள்
தற்கொலை

ராயக்கோட்டை அருகே விவசாயி தற்கொலை

Published On 2020-09-20 14:35 IST   |   Update On 2020-09-20 14:35:00 IST
ராயக்கோட்டை அருகே விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:

ராயக்கோட்டை அருகே உள்ள பிள்ளாரிஅக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் அப்பாவு (வயது 57). விவசாயி. இவர் தோட்டத்தில் உள்ள மாட்டு கொட்டகையில் விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் அப்பாவு நேற்று இறந்தார். அப்பாவு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News