செய்திகள்
மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
பவானி அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
பவானி:
பவானி அருகே உள்ள மாமரத்துபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. அவருடைய மகன் செந்தில் (வயது 34). இவர் கடந்த ஆகஸ்டு மாதம் 3-ந்தேதி அன்று தனது வீடு முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை என்று சித்தோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் போலீசார் நேற்று சித்தோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒருவர் மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். போலீசாரை பார்த்ததும் மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு, அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். உடனே போலீசார் துரத்தி சென்று அந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் ஈரோடு மாணிக்கம்பாளையம் நாராயண வலசு பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரின் மகன் சிவகுமார் (20) என்பதும், அவர் வைத்திருந்த மோட்டார்சைக்கிள் மாமரத்துப்பாளையம் செந்திலிடம் இருந்து திருடியது என்பதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அவரிடம் இருந்து மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவகுமாரை கைது செய்தனர்.
பவானி அருகே உள்ள மாமரத்துபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. அவருடைய மகன் செந்தில் (வயது 34). இவர் கடந்த ஆகஸ்டு மாதம் 3-ந்தேதி அன்று தனது வீடு முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை என்று சித்தோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் போலீசார் நேற்று சித்தோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒருவர் மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். போலீசாரை பார்த்ததும் மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு, அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். உடனே போலீசார் துரத்தி சென்று அந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் ஈரோடு மாணிக்கம்பாளையம் நாராயண வலசு பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரின் மகன் சிவகுமார் (20) என்பதும், அவர் வைத்திருந்த மோட்டார்சைக்கிள் மாமரத்துப்பாளையம் செந்திலிடம் இருந்து திருடியது என்பதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அவரிடம் இருந்து மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவகுமாரை கைது செய்தனர்.