செய்திகள்
கைது

காஞ்சிபுரம் அருகே மணல் கடத்திய 2 பேர் கைது

Published On 2020-09-19 09:44 GMT   |   Update On 2020-09-19 09:44 GMT
காஞ்சிபுரம் அருகே மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:

காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கை பாலாற்று பகுதியில் இருசக்கர வாகனத்தில் மணல் கடத்தப்படுவதாக காஞ்சிபுரம் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையொட்டி சப்-இன்ஸ்பெக்டர் கங்காதரன் போலீசாருடன் அங்கு விரைந்து சென்றார். அப்போது மணல் கடத்தியது தெரிய வந்தது.

இதையொட்டி ஓரிக்கை மகாலட்சுமி நகரை சேர்ந்த குமார் (வயது 55), கவுதம் (24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News