செய்திகள்
காஞ்சிபுரம் அருகே மணல் கடத்திய 2 பேர் கைது
காஞ்சிபுரம் அருகே மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கை பாலாற்று பகுதியில் இருசக்கர வாகனத்தில் மணல் கடத்தப்படுவதாக காஞ்சிபுரம் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையொட்டி சப்-இன்ஸ்பெக்டர் கங்காதரன் போலீசாருடன் அங்கு விரைந்து சென்றார். அப்போது மணல் கடத்தியது தெரிய வந்தது.
இதையொட்டி ஓரிக்கை மகாலட்சுமி நகரை சேர்ந்த குமார் (வயது 55), கவுதம் (24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.