செய்திகள்
வீடு புகுந்து கொள்ளை

அந்தியூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை கொள்ளை

Published On 2020-09-18 13:59 GMT   |   Update On 2020-09-18 13:59 GMT
அந்தியூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்தியூர்:

அந்தியூர் அருகே உள்ள அத்தாணி புதுக்காடு பகுதியை சேர்ந்தவர் தீபலட்சுமி (வயது 40). இவர் நேற்று முன்தினம் இரவு சவுண்டப்பூரில் உள்ள தனது அக்காள் வீட்டுக்கு சென்று தங்கினார். நேற்று காலை அவர் வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் உள்ளே சென்று பார்த்தார். அங்கிருந்த பீரோவும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதிலிருந்த ரூ.25 ஆயிரம் பணத்தை காணவில்லை. மேலும் அரிசி மூட்டைகள் பின்புறம் பையில் வைக்கப்பட்டு இருந்த தங்கசங்கிலி, மோதிரம் உள்ளிட்ட நகைகளையும் காணவில்லை.

இதுகுறித்து தீபலட்சுமி ஆப்பக்கூடல் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிவிட்டு சென்றதை யாரோ மர்மநபர்கள் நோட்டமிட்டுள்ளனர். பின்னர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவை உடைத்து திறந்துள்ளனர். அதன்பின்னர் அதிலிருந்த ரூ.25 ஆயிரத்தை கொள்ளையடித்துள்ளனர். அதைத்தொடர்ந்து அரிசி மூட்டையின் பின்புறம் பையில் இருந்த 20 பவுன் நகையையும் கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News