செய்திகள்
தற்கொலை

உத்தனப்பள்ளி அருகே பெயிண்டர் தற்கொலை

Published On 2020-09-18 08:12 GMT   |   Update On 2020-09-18 08:12 GMT
உத்தனப்பள்ளி அருகே பெயிண்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பரத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 28). பெயிண்டர். இவருக்கும், இவரது மனைவி அர்ச்சனா (21) என்பவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வீட்டை விட்டு வெளியே சென்ற முனியப்பன், கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ள கரடிகுட்டை கிராமத்தில் உள்ள ஒரு ஓட்டலின் பின்புறம் விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து உத்தனப்பள்ளி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவாஜி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News