செய்திகள்
டி.ஆர்.பாலு

நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி.க்கள் நாளை போராட்டம் - டி.ஆர்.பாலு

Published On 2020-09-13 13:22 GMT   |   Update On 2020-09-13 14:44 GMT
நீட் தேர்வு பிரச்சினை தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் திமுக சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மக்களவை உறுப்பினரும், திமுக பொருளாளருமான டி.ஆர். பாலு அறிவித்துள்ளார்.
சென்னை:

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு நாடு முழுவதும் தொடங்கியது. தமிழகத்தில் 14 நகரங்களில் நடைபெறும் தேர்வில் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 990 மாணவர்கள் பங்கேற்றனர்.  சென்னை, திருச்சி, சேலம், நெல்லை, மதுரை, கோயம்புத்தூர், கரூர், திருவள்ளூர் , கடலூர், நாமக்கல் , காஞ்சிபுரம், வேலூர் , கன்னியாகுமரி , தஞ்சாவூர் ஆகிய 14 நகரங்களில் 238 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. உடல் வெப்ப நிலை பரிசோதனைக்கு பிறகு முககவசம் அணிந்த மாணவர்கள் மட்டுமே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.  பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நீட் தேர்வு நடைபெற்றது.

இந்நிலையில் நீட் தேர்வு பிரச்சினை குறித்து நாளை காலை 8 மணியளவில் நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி.க்கள் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றும், நீட் தொடர்பாக போராட்டம் நடத்த கூட்டணிக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம் என்று மக்களவை உறுப்பினரும், திமுக பொருளாளருமான டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News