செய்திகள்
தற்கொலை

ஊத்தங்கரை அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2020-09-12 10:11 GMT   |   Update On 2020-09-12 10:11 GMT
ஊத்தங்கரை அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊத்தங்கரை:

கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டியை அடுத்த சாலமரத்துப்பட்டி அருகே உள்ள கஞ்சனூர் கிராமத்தை சேர்ந்தவர் மாது. இவரது மகன் சுரேஷ் (வயது 24). இவர் எந்த வேலைக்கும் செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். இதை அவருடைய குடும்பத்தினர் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த சுரேஷ் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சாமல்பட்டி போலீசார் விரைந்து சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வாலிபர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News