செய்திகள்
கோப்பு படம்.

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

Published On 2020-09-11 14:29 GMT   |   Update On 2020-09-11 14:29 GMT
தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

தமிழகத்தில் 8 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

* மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளராக மகேஸ்வரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

* நில சீர்த்திருத்தத்துறை இயக்குநராக லில்லி, நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* பொதுத்துறை சிறப்பு செயலாளராக வெங்கடேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* சட்டம், ஒழுங்கு துணை செயலராக அம்ரித், நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* நிதித்துறை சிறப்பு செயலாளராக ரீட்டா ஹாரிஸ் தாக்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* ஆணையராக ஆனந்த் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* வணிக வரி கூடுதல் ஆணையராக லக்‌ஷ்மி பிரியா, நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* வணிக வரித்துறை துணை ஆணையராக நார்ணவாரே மணிஷ் ஷங்கரோ நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News