செய்திகள்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் இறப்பு எண்ணிக்கையும் குறைந்து வருகிறது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

Published On 2020-09-11 17:08 IST   |   Update On 2020-09-11 17:08:00 IST
தமிழகத்தில் இறப்பு எண்ணிக்கையும் தினமும் குறைந்து வருவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் மாவட்ட வளர்ச்சி ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு முதலமச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

* 7 ஆயிரம், 8 ஆயிரம் என்று இருந்த பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது

* தமிழகம் முழுவதும் நாளொன்றுக்கு 5,500 பேருக்கு பாதிப்பு

* அறிகுறி உள்ளவர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை

* 100, 110 என்று இருந்த உயிரிழப்பு எண்ணிக்கையும் பாதியளவுக்கு குறைந்துவிட்டது

* நேரடியாக கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மிக மிகக் குறைவு

* மக்கள் ஒத்துழைப்பு அளித்தால்தான் கொரோனா கட்டுக்குள் வந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும்

* எதிர்க்கட்சிகள் அரசைக் குறைகூறி வருகின்றன

* மருத்துவர்கள், செவிலியர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர்

* சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிகம் உள்ளன.

* மக்கள் அதிகம் வந்து செல்லும் மாவட்டங்களாக இருப்பதால் காஞ்சிபுரம், செங்கல்பட்டில் நோய் பரவல் அதிகம்

* வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்தும் தொழிலாளர்கள் அதிகம் வருகின்றனர்

* மருத்துவமனைகளில் போதுமான படுக்கை வசதிகள் உள்ளன

* காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்களுக்கு பரிசோதனை

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Similar News