செய்திகள்
தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவன் ராஜேஷ்.

‘வீடியோகேம்’ விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் 9-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2020-09-10 02:27 GMT   |   Update On 2020-09-10 02:27 GMT
கரூர் அருகே ‘வீடியோகேம்’ விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால், 9-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
கரூர்:

கரூர் அருகே உள்ள பசுபதிபாளையம் வடக்கு தெருவை சேர்ந்தவர் முத்துமாணிக்கம். இவருடைய மனைவி ராமாயி. இருவரும் கட்டுமான கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இதில் மகன் ராஜேஷ் (வயது 13) அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்நிலையில் ராஜேசுக்கு ஆன்லைன் வகுப்பு நடைபெற்று வந்துள்ளது. ஆனால் ராஜேஷ் ஆன்லைன் வகுப்பில் கவனம் செலுத்தாமல், செல்போனில் வீடியோகேம் விளையாடி வந்துள்ளான்.

இதனால் அவருடைய தாயார் ராமாயி, ராஜேசை கண்டித்துள்ளார். இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டான். இந்நிலையில் நேற்று காலை பெற்றோர்கள் வேலைக்கு சென்று விட்டனர். இதனால் வீட்டில் தனியாக இருந்த ராஜேஷ், தாயின் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். இதைக்கண்ட அவரது உறவினர்கள் பசுபதிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, ராஜேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News