செய்திகள்
அமைச்சர் செங்கோட்டையன்

5 நாட்களுக்கு ஆன்-லைன் வகுப்புகள் நிறுத்தம்: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

Published On 2020-09-09 09:18 GMT   |   Update On 2020-09-09 09:29 GMT
மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க 5 நாட்கள் ஆன்-லைன் வகுப்புகள் நிறுத்தப்படுகிறது என்று அமைச்சர் கேஏ செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோபி:

கோபி அருகே உள்ள வெள்ளாங்கோயிலில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க வருகிற 21-ந் தேதி முதல் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தப்படுகிறது. எனவே 5 நாட்களுக்கு ஆன் லைன் வகுப்புகள் நடத்தக் கூடாது என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இதனை வட்ட அளவில் கண்காணிக்க அலுவலர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் ஆய்வு செய்து கண்காணிப்பார்கள். கொரோனா பாதிப்பு குறைந்த பின்னர் தான் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும்.

பகுதி நேர நூலகங்களை முழு நேர நூலகங்களாக மாற்றம் செய்ய துறை ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கையை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.

விதிகளை மீறியதாக பள்ளிகள் மீது புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News