செய்திகள்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

ஒளியற்ற விழிகளுக்கு ஒளியாகி இவ்வுலகை காணச்செய்திட கண்தானம் செய்வோம்: முதல்வர் பழனிசாமி டுவீட்

Published On 2020-09-07 18:59 IST   |   Update On 2020-09-07 18:59:00 IST
ஒளியற்ற விழிகளுக்கு ஒளியாகி இவ்வுலகை காணச் செய்திட அனைவரும் மனுமுவந்து கண்தானம் செய்ய வேண்டுமென தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘ஒளியற்ற விழிகளுக்கு ஒளியாகி இவ்வுலகை காணச்செய்திட அனைவரும் மனுமுவந்து கண்தானம் செய்ய வேண்டுமென அறிவுறுத்தும் தேசிய கண் தான நாளையொட்டி கண்தானம் செய்வதில் உளமார மகிழ்ச்சி கொள்கிறேன்.

அனைவரும் கண்தானம் செய்ய முன்வர வேண்டுமென இந்நாளில் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

கண்தானம் செய்வோம்!’’ எனப் பதிவிட்டுள்ளார்.

Similar News