செய்திகள்
கைது

திண்டுக்கல்லில் லேப்டாப் திருடிய 2 பேர் கைது

Published On 2020-09-07 10:16 GMT   |   Update On 2020-09-07 10:16 GMT
திண்டுக்கல்லில் கடையை உடைத்து லேப்டாப் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்.பட்டி யில் உள்ள கடையை உடைத்து லேப்டாப், டி.வி.டி.பிளேயர் மற்றும் பணத்தை சிலர் திருடிச்சென்றனர். இதுகுறித்து கடையின் உரிமையாளர் கொடுத்த புகாரின்பேரில் டவுன் டி.எஸ்.பி மணிமாறன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். கடையில் இருந்த சி.சி.டிவி காட்சிகளை வைத்து சோதனை செய்தபோது தாடிக் கொம்புவை சேர்ந்த விஸ்வநாத்(19), திண்டுக்கல்லை சேர்ந்த ராஜாகார்த்திக்(30) ஆகியோர் லேப் டாப் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்து நகர்வடக்கு போலீசில் ஒப்படைத்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து லேப்டாப் மற்றும் சி.டிபிளேரையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News