செய்திகள்
மின்சாரம் தாக்கி பலி

மின்சாரம் தாக்கி கொத்தனார் பலி

Published On 2020-09-07 15:23 IST   |   Update On 2020-09-07 15:23:00 IST
மின்சாரம் தாக்கி கொத்தனார் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வண்டலூர்:

திருவண்ணாமலை மாவட்டம் ஏசாம்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டித்துரை (வயது 26), கொத்தனார். இவர் கூடுவாஞ்சேரியை அடுத்த காயரம்பேடு பவானி நகரில் வீடு கட்டும் பணியில் நேற்று முன்தினம் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்த பாண்டித்துரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் பாண்டித்துரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News