செய்திகள்
வீடு புகுந்து கொள்ளை

சிதம்பரம் அருகே ஆசிரியர் வீட்டில் நகை திருட்டு

Published On 2020-09-07 11:52 IST   |   Update On 2020-09-07 11:52:00 IST
சிதம்பரம் அருகே ஆசிரியர் வீட்டில் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்ணாமலைநகர்:

சிதம்பரம் அருகே உள்ள சகுந்தலாம்பாள் நகரில் வசித்து வருபவர் கபிலன்(வயது31). இவர் மயிலாடுதுறையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் விளையாட்டு பயிற்சியளிக்கும் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் உறவினர் வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது அவரது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5½ பவுன் நகையை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது. திருடுபோன நகையின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Similar News