செய்திகள்
மின்நிறுத்தம்

ரெட்டிச்சாவடி பகுதியில் நாளை மின்நிறுத்தம்

Published On 2020-09-06 14:22 GMT   |   Update On 2020-09-06 14:22 GMT
ரெட்டிச்சாவடி பகுதியில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
கடலூர்:

நல்லாத்தூர் துணை மின்நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் செய்யப்படும் பகுதிகளான, நல்லாத்தூர், செல்லஞ்சேரி, கீழ் குமாரமங்கலம், நல்லவாடு, காட்டுப்பாளையம், ராசாப்பாளையம், புதுபூஞ்சோலைக்குப்பம், தென்னம்பாக்கம், சந்திக்குப்பம், ரெட்டிச்சாவடி, காரணப்பட்டு, புதுக்கடை, குட்டியாங்குப்பம், மதலப்பட்டு, இருசாம்பாளையம், கிளிஞ்சிக்குப்பம், புதுக்குப்பம், தூக்கணாம்பாக்கம், சிங்கிரிகுடி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரைக்கும் மின்சாரம் வினியோகம் இருக்காது. 

மேற்கண்ட தகவலை கடலூர் மின்வாரிய செயற்பொறியாளர் வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News