செய்திகள்
வீடு புகுந்து கொள்ளை

ஆம்பூரில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

Published On 2020-09-05 11:58 GMT   |   Update On 2020-09-05 11:58 GMT
ஆம்பூரில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூர்:

ஆம்பூர் ஏ.கஸ்பா அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40). இவரது வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 3 பவுன் நகை மற்றும் ரூ.6,500 ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து ஆம்பூர் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News