செய்திகள்
கைது

நத்தம் அருகே கஞ்சா செடி வளர்த்த 3 பேர் கைது

Published On 2020-09-04 10:06 GMT   |   Update On 2020-09-04 10:06 GMT
நத்தம் அருகே கஞ்சா செடி வளர்த்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

செந்துறை:

நத்தம் அருகே கரந்த மலை பகுதியில் பெரிய மலையூர், சின்ன மலையூர் வலசை, பள்ளக்காடு ஆகிய கிராமங்கள் உள்ளது.மலையூர் பகுதியில் கஞ்சா செடி வளர்ப்பதாக திண்டுக்கல் தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மற்றும் போலீசார் மலையூருக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது மறைவான பகுதியில் கஞ்சா செடி வளர்ப்பது கண்டுபிடிக்கபட்டது.

223 கஞ்சா செடிகளை போலீசார் கைப்பற்றினர். தொடர்ந்து கஞ்சா செடி வளர்த்ததாக பெரிய மலையூரை சேர்ந்த ராஜேந்திரன்(48), வெள்ளைத்துரை(40), நாச்சான் (70), ஆகிய 3 பேரை கைது செய்து கஞ்சா செடிகளை நத்தம் போலீசில் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News