செய்திகள்
முழு ஊரடங்கை மீறிய 16 பேர் மீது வழக்கு
ஊரடங்கை மீறியதாக ஊட்டி நகரம், ஊட்டி ஊரகம், குன்னூர் என மாவட்டம் முழுவதும் 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஊட்டி:
தமிழகத்தில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த கடந்த மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று முன்தினம் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.
முழு ஊரடங்கில் பொதுமக்கள் அவசிய, அவசர காரணங்களை தவிர வேறு எவ்வித காரணங்களுக்காகவும் வெளியே வரக்கூடாது. மீறினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. முழு ஊரடங்கை மீறி அவசியம் இன்றி வெளியே யாரேனும் சுற்றுகிறார்களா? என்று போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது முழு ஊரடங்கை மீறியதாக ஊட்டி நகரம், ஊட்டி ஊரகம், குன்னூர், தேவாலா என மாவட்டம் முழுவதும் 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.