செய்திகள்
கூடலூர்-கோழிக்கோடு சாலையில் உலா வந்த காட்டு யானை
கூடலூர்-கோழிக்கோடு சாலையில் உலா வந்த காட்டுயானையால் பரபரப்பு ஏற்பட்டது.
கூடலூர்:
கூடலூர் பகுதியில் அடர்ந்த வனங்களும் தேயிலை தோட்டங்களும் உள்ளன. வனத்திலிருந்து தினமும் காட்டுயானைகள் வெளியேறி ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்கள், ரேஷன் கடைகள், வீடுகளை சேதப்படுத்தி வருகிறது.
குறிப்பாக கூடலூர் தொரப்பள்ளி, தோட்டமூலா, 27-வது மைல், கெவிபாரா, செளுக்காடி, 2-ம் மைல், புளியம் பாரா, தேவாலா உள்ளிட்ட பல இடங்களில் காட்டுயானைகள் நடமாட்டம் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் விவசாயிகள் வாகன ஓட்டிகள் என அனைத்து தரப்பினரும் அச்சமடைந்துள்ளனர்.
கடந்த சில தினங்களாக வேடன் வயல் பகுதியிலிருந்து 2, 1-ம் மைல் வழியாக மெயின் ரோட்டில் காட்டு யானை நடமாட்டம் உள்ளது. இதேபோல் நேற்று முன்தினம் நள்ளிரவு அப்பகுதியில் புகுந்த காட்டு யானை கூடலூர் செம்பாலா பகுதியில் வந்தது. பின்னர் அப்பகுதியில் பயிரிட்டு இருந்த பாக்கு, வாழை உள்ளிட்ட பயிர்களை தின்று சேதப்படுத்தியது.
தொடர்ந்து கூடலூர்-கோழிக்கோடு சாலையில் நேற்று காலை 6.30 மணிக்கு உலா வந்தது. இதைக்கண்ட வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வேகமாக ஓடி சென்றனர். பின்னர் காட்டு யானை வாகன பழுது பார்க்கும் கடை வழியாக வெளியேறி தனியார் தேயிலை தோட்டத்துக்குள் புகுந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, வழக்கமாக நகரை ஒட்டியுள்ள சுற்றுவட்டார பகுதியில் காட்டுயானைகள் நடமாட்டம் இருக்கும். ஆனால் தற்போது கூடலூர் நகருக்குள் வர தொடங்கியுள்ளது. காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. எனவே மெயின் ரோட்டில் காட்டு யானைகள் நடமாடுவதை தடுக்க வேண்டும் என்றனர்.
கூடலூர் பகுதியில் அடர்ந்த வனங்களும் தேயிலை தோட்டங்களும் உள்ளன. வனத்திலிருந்து தினமும் காட்டுயானைகள் வெளியேறி ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்கள், ரேஷன் கடைகள், வீடுகளை சேதப்படுத்தி வருகிறது.
குறிப்பாக கூடலூர் தொரப்பள்ளி, தோட்டமூலா, 27-வது மைல், கெவிபாரா, செளுக்காடி, 2-ம் மைல், புளியம் பாரா, தேவாலா உள்ளிட்ட பல இடங்களில் காட்டுயானைகள் நடமாட்டம் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் விவசாயிகள் வாகன ஓட்டிகள் என அனைத்து தரப்பினரும் அச்சமடைந்துள்ளனர்.
கடந்த சில தினங்களாக வேடன் வயல் பகுதியிலிருந்து 2, 1-ம் மைல் வழியாக மெயின் ரோட்டில் காட்டு யானை நடமாட்டம் உள்ளது. இதேபோல் நேற்று முன்தினம் நள்ளிரவு அப்பகுதியில் புகுந்த காட்டு யானை கூடலூர் செம்பாலா பகுதியில் வந்தது. பின்னர் அப்பகுதியில் பயிரிட்டு இருந்த பாக்கு, வாழை உள்ளிட்ட பயிர்களை தின்று சேதப்படுத்தியது.
தொடர்ந்து கூடலூர்-கோழிக்கோடு சாலையில் நேற்று காலை 6.30 மணிக்கு உலா வந்தது. இதைக்கண்ட வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வேகமாக ஓடி சென்றனர். பின்னர் காட்டு யானை வாகன பழுது பார்க்கும் கடை வழியாக வெளியேறி தனியார் தேயிலை தோட்டத்துக்குள் புகுந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, வழக்கமாக நகரை ஒட்டியுள்ள சுற்றுவட்டார பகுதியில் காட்டுயானைகள் நடமாட்டம் இருக்கும். ஆனால் தற்போது கூடலூர் நகருக்குள் வர தொடங்கியுள்ளது. காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. எனவே மெயின் ரோட்டில் காட்டு யானைகள் நடமாடுவதை தடுக்க வேண்டும் என்றனர்.