செய்திகள்
கோரோனா வைரஸ்

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் உயிரிழப்பு

Published On 2020-08-22 15:31 IST   |   Update On 2020-08-22 15:31:00 IST
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.
நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மாவுரெட்டி பகுதியை சேர்ந்த 62 வயது முதியவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதேபோல் குமாரபாளையத்தை சேர்ந்த 83 வயது மூதாட்டி கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியிலும், ராசிபுரம் அருகே உள்ள கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த 51 வயது ஆண் சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்கள் இருவரும் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். இதனால் நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோானாவுக்கு பலியான நபர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்து உள்ளது.

Similar News