செய்திகள்
கோப்புபடம்

சிங்கம்புணரி அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2020-08-13 15:30 IST   |   Update On 2020-08-13 15:30:00 IST
சிங்கம்புணரி அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிங்கம்புணரி:

சிங்கம்புணரி அருகே உள்ள மூவன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜாங்கம் (வயது38). விறகு வெட்டும் தொழிலாளி. இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். சம்பவத்தன்று இவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. 

இதனால் மனவேதனை அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து எஸ்.வி. மங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News