செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

அரியலூரில் மேலும் 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Published On 2020-08-11 13:34 IST   |   Update On 2020-08-11 13:34:00 IST
அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 54 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 54 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அரியலூர் நகராட்சி, அரியலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தலா 5 பேருக்கும், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 16 பேருக்கும், செந்துறை, ஜெயங்கொண்டம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தலா 9 பேருக்கும், தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் ஒருவருக்கும், ஆண்டிமடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 3 பேருக்கும், ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 6 பேருக்கும் என மொத்தம் 54 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,345 ஆக உயர்ந்துள்ளது. இதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். 1,020 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 312 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 386 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

Similar News